ரோட்டில் விழுந்த மரம்
தாண்டிக்குடி: தாண்டிக்குடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் தாண்டிக்குடி பண்ணைக்காடு ரோட்டில் கடுகுதடியில் ராட்சத மரம் விழுந்தது. நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.