மோதலில் இருவர் காயம்
வடமதுரை : புத்துார் பிச்சம்பட்டி மாரியப்பன் 45, சித்திரை கண்ணன் 22, குடும்பத்தினர் இடையே முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் இரு குடும்பத்தினரும் தாக்கி கொண்டனர். மாரியப்பனின் மகன் தர்மமூர்த்தியை சித்திரை கண்ணன் அரிவாளால் வெட்டினார். இதுபோல் மாரியப்பன் தரப்பினர் சித்திரை கண்ணனை கட்டையால் தாக்கினர். வடமதுரை எஸ்.ஐ., தாவூத்உசேன் விசாரிக்கிறார்.