உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

பழநி கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

பழநி : பழநி பெரியப்பா நகர் குப்பை கிடங்கு அருகே வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். பழநி ஜவஹர் நகரை சேர்ந்தவர் மெக்கானிக் அஜித்குமார் 29. இவரது மனைவியுடன் குபேரபட்டினத்தை சேர்ந்த நவநீதன் 25, பழகியதால் இவரை , அஜித்குமார் நண்பர்களுடன் சேர்ந்து பெரியப்பா நகரில் உள்ள குப்பை கிடங்கு அருகே கழுத்தை அறுத்து கொலை செய்தார். போலீசார் அஜித்குமார், சுதாகர் என இருவரை கைது செய்த நிலையில் பழநி கீழ்வடம்போக்கி தெருவை சேர்ந்த ஆதித்யா 28, இந்திரா நகரை சேர்ந்த ராகுல்தேவ் 35, ஆகிய இருவரை டவுன் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை