பட்டாசு லாரி மீது மோதிய வேன்
வேடசந்துார்: சிவகாசியில் இருந்து பட்டாசு பண்டல்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி வேடசந்துார் வழியாக கரூர் சென்றது. ஈரோடு சூரம்பட்டி வலசு சந்திரசேகரன் 53, ஓட்டி சென்றார். அய்யர்மடத்தில் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் டீ சாப்பிட சென்றார். உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆதர்ஸ் 25, ஒட்டி வந்த காற்றாலை பாதுகாப்பு வேன் லாரியின் பின் மோதியது. டிரைவர் காயம் இன்றி தப்பினார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.