உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பொது போக்குவரத்தில் பழைய வாகனங்கள் எப்போது மாறும்; தினமும் சிரமங்களை சந்திக்கும் மக்கள்

பொது போக்குவரத்தில் பழைய வாகனங்கள் எப்போது மாறும்; தினமும் சிரமங்களை சந்திக்கும் மக்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் பஸ்களில் தினசரி கூலி வேலைக்கு செல்பவர்கள், வியாபாரத்திற்கு செல்பவர்கள், அலுவல் ரீதியாக ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணிப்பவர்கள் என அனைத்துத்தரப்பு மக்களும் நம்பி இருப்பது பொது போக்குவரத்தைத்தான். ஆனால் லட்சக்கணக்கான மக்கள் நம்பியிருக்கும் அரசு பஸ்கள் பொதுபோக்குவரத்து ஆரோக்கியமான கட்டமைப்பில் இல்லை என்பதே பெரும்பான்மையான மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. காற்று மாசுபாடை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக குறைவான புகை வெளியேற்றம் தரும் வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது. அதேநேரம் 15 ஆண்டுகளுக்கு மேலாக பொது போக்குவரத்தில் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களை அகற்றிவிட்டு புதிதாக வாகனங்களை இயக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்சார வாகனங்களையும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி இருந்தது. ஆனால் பெரும்பாலான இடங்களில் பழைய வாகனங்களே தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆயுட்காலம் முடிந்த பஸ்கள் கூட ஒராண்டு முதல் 2 ஆண்டு வரை புதுப்பிப்பு செய்து காலம் நீட்டிப்பு செய்யப்பட்டு இயக்கப்படுகிறது. இன்னும் சில இடங்களில் பழைய பஸ்கள் மறு கட்டமைப்புக்கு உட்படுத்தப்பட்டு புதிது போல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது. இது நிர்வாக ரீதியாக ஆரம்பத்தில் ஒரு சில நன்மைகளை அரசுக்கு தந்தாலும் நாளடைவில் பெரும் பிரச்னைகள் தரும் விஷயமாகவே அடையாளம் காணப்படுகிறது. பயன்பாட்டுக்கு பயனற்ற நிலையில் பொது போக்குவரத்தில் இருக்கும் பஸ்களை அகற்றிவிட்டு உடனடியாக புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை