கொடை பஸ்ஸ்டாண்டில் காட்டுமாடுகளால் அச்சம்
கொடைக்கானல் : கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டில் நடமாடும் காட்டுமாடுகளால் பயணிகள் தாக்கப்படும் அபாயம் உள்ளது.கொடைக்கானலில் பொதுமக்கள் அதிகளவு வந்து செல்லும் பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை காட்டுமாடு சர்வ சாதாரணமாக நடந்து சென்றது. இதுபோன்ற அசாதாரணமான சூழலில் பயணிகள் வளர்ப்பு மாடு என சாதரணமாக நிற்கும் சூழலால் தாக்கப்படும் அச்சுறுத்தல் உள்ளது. வனத்துறை இவ்விஷயத்தில் அக்கறை காட்டி நகரில் சுற்றி திரியும் காட்டுமாடுகளை வனப்பகுதியில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.