உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாகனம் மோதி தர்பூசணி வியாபாரி பலி

வாகனம் மோதி தர்பூசணி வியாபாரி பலி

வாகனம் மோதி தர்பூசணி வியாபாரி பலி காங்கேயம்:திருப்பூர் மாவட்டம், காங்கேயம்-கோவை ரோடு பகுதியை சேர்ந்தவர் மாதையன், 65. இவர் கடந்த சில ஆண்டுகளாக, காங்கேயம் சக்தி நகர் பகுதியில் தர்பூசணி வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு தாராபுரம் ரோட்டில் நடந்து வரும்போது, ரைஸ்மில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே மாதையன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ