உணவு பொருட்கள் கடத்தல்தடுப்பு குறித்து ஆலோசனை
உணவு பொருட்கள் கடத்தல்தடுப்பு குறித்து ஆலோசனை சத்தியமங்கலம்:தமிழகம், கர்நாடக மாநில எல்லை பகுதியில் உள்ள தாளவாடியில், உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் தலைமை வகித்தார். இதில் இரு மாநில உணவுப் பொருள் வழங்கல் துறை, காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.