பூசாரிகளுக்கு இலவசமாக மாடு வழங்கிய அமைச்சர்
ஈரோடு: ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் வகையறா கோவில்களுக்கு, வேண்டுதலுக்காக பக்தர்கள் மாடுகளை வழங்குவது வழக்கம். இதில் கோவிலில் பராமரிக்கும் அளவு போக மீதி மாடுகளை, ஒரு கால பூஜை செய்யும் கோவில் பூசாரிகள் மற்றும் அர்ச்சகர்க-ளுக்கு அளிக்கப்படும். அந்த வகையில் கிராமப்புற பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு என, ௧5 பேருக்கு மாடு வழங்கும் நிகழ்ச்சி, கோவிலில் நேற்று நடந்தது. அமைச்சர் முத்துசாமி மாடுகளை வழங்கினார்.