உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தண்ணீர் திறந்து ஒரு மாதமாகியும் மேட்டூர் வலது கரை வாய்க்காலில் வறட்சி

தண்ணீர் திறந்து ஒரு மாதமாகியும் மேட்டூர் வலது கரை வாய்க்காலில் வறட்சி

பவானி: -மேட்டூர் அணையிலிருந்து வலது கரை வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து ஒரு மாதமாகியும், கடைமடைக்கு செல்லாததால் விவசாயிகள் சோகமடைந்துள்ளனர்.மேட்டூர் அணையில் இருந்து மேற்கு இடது மற்றும் வலது கரை பாசனங்களுக்கு கடந்த மாதம், 30ம் தேதி தண்ணீர் திறக்கப்-பட்டது. இந்நிலையில் கடைமடை பாசன பகுதியான ஈரோடு மாவட்டம் ஊராட்சிக்கோட்டை, குருப்பநாயக்கன்பாளையம் பகு-திகளுக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் நெல் சாகுபடியை தொடங்குவதில் மந்த நிலை காணப்படுகிறது. பல விவசாயிகள் நாற்றாங்கால் அமைக்காமல் உள்ளனர். கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.இதனால் கிளை பல கிளை வாய்க்கால்கள் துார்வாரப்படா-மலும், புதர்மண்டியும் கிடக்கிறது. வாய்க்கால்களை முறையாக துார்வாரி கடைமடை பகுதிக்கு தண்ணீர் தடையின்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !