உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குறைதீர் கூட்டத்தில் 352 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 352 மனுக்கள் ஏற்பு

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்-கரா தலைமையில் டி.ஆர்.ஓ., சாந்தகுமார் முன்னிலையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சாலை, குடிநீர் வசதி உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 352 மனுக்கள் பெறப்பட்டு, உரிய துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜ-கோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை-யினர் நல அலுவலர் சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ