உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கல்லுாரி குடியிருப்பில் சிக்கிய இரு பாம்புகள்

கல்லுாரி குடியிருப்பில் சிக்கிய இரு பாம்புகள்

கல்லுாரி குடியிருப்பில்சிக்கிய இரு பாம்புகள்ஈரோடு, செப். 18-ஈரோடு, வீரப்பன்சத்திரம், சி.என்.கல்லுாரி அருகே கல்லுாரிக்கான குடியிருப்பு உள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.இதுபற்றி கிடைத்த தகவலின் பேரில், பாம்பு பிடிக்கும் வீரர் யுவராஜா, அங்கு சென்றார். குடியிருப்பை ஒட்டிய சுவர் பகுதியில் இருந்து, 8 மற்றும், 9 அடி நீளமுள்ள மஞ்சள் மற்றும் கருஞ்சாரை பாம்பை பிடித்து, சாக்கில் அடைத்தார்.ஈரோடு, ரோஜா நகரில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் பாம்புகளை ஒப்படைத்தார்.வனத்துறையினர் அவற்றை எடுத்து சென்று, வனப்பகுதியில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை