உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாடுகள் திருடிய 2 பேர் கைது

மாடுகள் திருடிய 2 பேர் கைது

தாராபுரம்;தாராபுரத்தை அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பழனி, 70; இவர் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த இரு கறவை மாடுகள், கடந்த மாதம் திருட்டு போனது. பழனி புகாரின்படி அலங்கியம் போலீசார், களவாணிகளை தேடி வந்தனர்.இது தொடர்பாக தாராபுரம், சென்னாக்கல்பாளையம் சுதாகர், 29; தளவாய்பட்டினம் ராஜா, 34, ஆகியோரை கைது செய்தனர். மாடுகளை திருடி கோவையில் விற்றதை ஒப்புக் கொண்டனர். இருவரையும் கைது செய்த போலீசார், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை