மேலும் செய்திகள்
காரமடை தேர் திருவிழாவுக்கு 80 சிறப்பு பஸ்கள்
11-Mar-2025
ஏப்., 7, 8, 14ல் சிறப்பு பஸ்கள்: பண்ணாரி குண்டத்துக்காக இயக்கம்ஈரோடு:ஈரோடு மாவட்டம், பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா வரும் ஏப்., 7, 8ல் நடக்கிறது. அவ்விழாவின் மறுபூஜை ஏப்., 14ல் நடக்க உள்ளது.இவ்விழாவுக்காக, ஈரோடு மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏப்., 7, 8 மற்றும், 14 ஆகிய நாட்களில் கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, கோபி, கவுந்தப்பாடி, பவானி, சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி, மைசூரு, நம்பியூர், பவானிசாகர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு இயக்கப்படுகிறது என, அரசு போக்குவரத்து கழக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
11-Mar-2025