உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாராயம் காய்ச்சியவர் குண்டாஸில் கைது

சாராயம் காய்ச்சியவர் குண்டாஸில் கைது

சாராயம் காய்ச்சியவர்குண்டாஸில் கைது ஈரோடு, நவ. 7-மொடக்குறிச்சி முகாசி அனுமன்பள்ளி சென்னிபாளியை சேர்ந்தவர் மணி, 58. தற்போது நசியனுார் மேற்குபுதுாரில் வசிக்கிறார். கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக, கோபி மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர், கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என, கோபி மதுவிலக்கு போலீசார் எஸ்.பி., ஜவகர் மூலம் ஈரோடு கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்து, மணியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதன்படி மணியை, கோவை மத்திய சிறையில் மதுவிலக்கு போலீசார் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை