உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை

ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை

ஈரோடு: நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இதை-யொட்டி பொது இடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில், போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே போலீசார் நேற்று பயணிகள் உடமைகளை பரிசோதித்தனர். சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த நபர்கள் விசாரிக்கப்பட்டனர். மேலும் பிளாட்பார்ம், ரயில்கள், பார்சல் அலுவலகம், வாகனங்கள் நிறுத்-துமிடங்களில் பரிசோதனை செய்யப்பட்டது. ரயில்வே போலீசா-ருடன் இணைந்து ரயில்வே பாதுகாப்பு படையினரும் சோத-னையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ