உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாலத்தின் கீழ் வசிப்போர் பட்டா கோரி முறையீடு

பாலத்தின் கீழ் வசிப்போர் பட்டா கோரி முறையீடு

ஈரோடு: பவானி, லட்சுமி நகர் மசூதி வீதி பகுதியை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு வழங்கி கூறி-யதாவது: பவானி லட்சுமி நகர், மசூதி வீதி பகுதியில், உயர்-மட்ட மேம்பாலத்தின் கீழ், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். குடிசை போன்று அமைத்தும், திறந்த வெளியிலும் வசிக்கிறோம். எங்களுடன் இருந்த சிலருக்கு, கடந்த ஆண்டு-களில் சுள்ளிக்காட்டுமேடு பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கி, அங்கு சென்றுவிட்டனர். அப்போது எங்களுக்கு வீட்டு-மனை வழங்கவில்லை. தற்போது அவ்விடத்தில் பூங்கா அமைக்க உள்ளதாகவும், உடனடியாக இடத்தை காலி செய்து செல்லும்படி கூறி உள்ளனர். நாங்கள் வசிக்க மாற்றிடம் இல்லா-ததால், இலவச வீட்டுமனை பட்டா வழங்குங்கள். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை