திறன் போட்டி தேர்வில் 1,797 பேர் ஆப்சென்ட்
ஈரோடு:தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இளைஞர், இளம்பெண்களிடம் கலை, படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில், 63 வகை திறன்களை மையப்படுத்தி 'தமிழ்நாடு திறன் போட்டி நிலை--1' என்ற தலைப்பில், மாநிலம் முழுவதும் எழுத்து தேர்வு நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு காந்திஜி சாலை அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி உட்பட, 11 மையங்களில் நடந்தது. மொத்தம், 3,209 பேர் எழுத விண்ணப்பித்த நிலையில், 1,412 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 1,797 பேர் ஆப்சென்ட் ஆகினர். இதில் வெற்றி பெறுபவர்கள், அடுத்தகட்டமாக தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். இதில் வெற்றி பெறுபவர்கள், 2026ல் சீனாவின் ஷாங்காய் நகரில் நடக்கும் உலக திறன் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.