17 வயதில் தந்தையான சிறுவன் மீது 2 வழக்கு
ஈரோடு, அந்தியூர், தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு முடித்த, 17 வயது சிறுவன், ஈரோட்டை சேர்ந்த, பத்தாம் வகுப்பு படிக்கும், 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்தார். சிறுமிக்கு, 15 நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது. மருத்துவமனை மூலம் இதை அறிந்த குழந்தைகள் நல குழுவினர், பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதன் அடிப்படையில், குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில், சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.