உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி

தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி

கோபி: கோபி அருகே சிறுவலுார், வாவி தோட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 58; தோட்டத்தில் ஆறு வெள்ளாடு மற்றும் மூன்று செம்மறி ஆடு வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பட்-டிக்குள் புகுந்த தெருநாய்கள், இரு ஆடுகளை கடித்தும், மூன்று ஆடுகளை துாக்கியும் சென்றது. தவிர இரு வெள்ளாடு மற்றும் இரு செம்மறி ஆடுகளை, கடித்து கொன்று போட்டிருந்தது. சிறு-வலுார் போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் கோபி யூனியன் அதிகாரிகள், பலியான ஆடுகளுக்கு இழப்பீடு பெற்று தருவதாக உறுதியளித்தனர். சிறுவலுார் கால்நடை மருத்துவர் மூலம் உடற்-கூறு ஆய்வு செய்து ஆடுகள் புதைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ