சந்தைக்கு வந்த 450 மாடுகள்
ஈரோடு :ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 6,000 முதல், 24,000 ரூபாய் மதிப்பில், 40 கன்று, 23,000 முதல், 70,000 ரூபாய் மதிப்பில், 150 எருமை மாடுகள், 23,000 முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 200 பசு மாடுகள், 45,000 ரூபாய்க்கு மேற்பட்ட விலையில், 50க்கும் மேற்பட்ட கலப்பின மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் வந்திருந்தனர். வரத்தான மாடுகளில், 90 சதவீதம் விற்பனையானது.