உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 465 டன் விதைகள் மாவட்டத்தில் இருப்பு

465 டன் விதைகள் மாவட்டத்தில் இருப்பு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நடப்பு பருவ பயன்பாட்டுக்காக, 465 டன் விதைகள் இருப்பு உள்ளன.இதுபற்றி ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்காக வேளாண் விரிவாக்க மையங்களில் நெல் விதைகள் - 253.64 டன், சிறுதானியங்கள் - 65.2 டன், பயறு வகைகள் - 34.88 டன், எண்ணெய் வித்துக்கள் - 112.16 டன் என , 465.88 டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.ரசாயன உரங்களான யூரியா - 2,069.2 டன், டி.ஏ.பி., - 2,922.1 டன், பொட்டாஷ் - 2,129 டன், காம்ப்ளக்ஸ் - 7,472.33 டன் என உரங்கள், தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு, வினியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி