உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஞ்சா விற்ற 5 பேர் கைது

கஞ்சா விற்ற 5 பேர் கைது

ஈரோடு;ஈரோடு சூரம்பட்டி போலீசார், ஈரோடு-பழைய கரூர் ரோட்டில் முன்தினம் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது இருவர் தப்பி ஓட முயன்றனர். விரட்டிப்பிடித்து விசாரித்ததில், சூரம்பட்டி மணிகண்டன், 25; சூரம்பட்டி வலசு எம்.எஸ்.கே.நகர் பூபதி, 33, என்பது தெரிந்தது. கஞ்சா வியாபாரிகளான அவர்களிடம், 3.500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இதேபோல் ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் கஞ்சா விற்ற, மண்டபம் வீதி தியானேஷ், 20; மரப்பாலம் டேனியல் அஜய், 21; ஓடப்பள்ளம் பிரசாந்த், 19, ஆகியோரை கைது செய்த டவுன் போலீசார், 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை