உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 60 கிலோ குட்கா பறிமுதல் மளிகை கடைக்காரர் கைது

60 கிலோ குட்கா பறிமுதல் மளிகை கடைக்காரர் கைது

புன்செய் புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி நகர பகுதியில், தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்படி, புன்செய்புளியம்பட்டி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். நம்பியூர் சாலையில் தாய் மளிகை கடையில் சோதனை செய்ததில், ஹான்ஸ், கூல் லிப், போதை பாக்கு என, 60 கிலோ எடையிலான குட்கா பொருள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் முகம்மது மீராசாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி