உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 67.37 டன் காய்கறிகள் உழவர் சந்தையில் விற்பனை

67.37 டன் காய்கறிகள் உழவர் சந்தையில் விற்பனை

ஈரோடு: ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளுக்கு நேற்று வரத்தான, 67.37 டன் காய்கறிகள், 22.72 லட்சம் ரூபாய்க்கு விற்றது. ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய ஆறு இடங்களில் உழவர் சந்தை செயல்படுகிறது. சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான, 24.90 டன் காய்கறிகள், பழங்கள் எட்டு லட்சத்து, 63 ஆயிரத்து, 822 ரூபாய்க்கும், மாவட்டத்தில் உள்ள ஆறு உழவர் சந்தைகளிலும் வரத்தான, 67.37 டன் காய்கறிகள், பழங்கள், 22 லட்சத்து, 72 ஆயிரத்து 643 ரூபாய்க்கு விற்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கடந்த இரு தினங்களாக அதிகளவில் வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைகளில் காய்கறி, பழங்களை வாங்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை