மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் 7 மனு
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார். துணை மேயர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். வரி பிரச்னை, சாலை பிரச்னை என ஏழு பேர் மனு அளித்தனர். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.