உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபட் மோதி பந்தல் கடைக்காரர் உயிரிழப்பு

மொபட் மோதி பந்தல் கடைக்காரர் உயிரிழப்பு

ஈரோடு, சிவகிரி, இளங்கோ வீதியை சேர்ந்தவர் கருப்பைய்யா, 50, பந்தல் கடைக்காரர். கடந்த, 2ம் தேதி இரவு, 9:30 மணிக்கு சிவகிரி - முத்துார் சாலையில் மோனிகா டெய்லர் கடையை தாண்டி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மொபட்டில் வந்தவர், கருப்பைய்யா ஓட்டி வந்த மொபட் மீது மோதினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர், பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய கார்த்திகேயன் மீது, சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை