உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலை காமாட்சியம்மனுக்கு பாலாபிஷேகம்

சென்னிமலை காமாட்சியம்மனுக்கு பாலாபிஷேகம்

சென்னிமலை: சென்னிமலை காமாட்சி அம்மன் கோவிலில் நடப்பாண்டு பொங்கல் விழா வரும், 15ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் அம்மனுக்கு நேற்று பாலாபிஷேகம் நடந்தது. முன்னதாக காலை, 8:00 மணிக்கு பால் குடங்களுக்கு சிறப்பு பூஜை செய்து, சென்னிமலை நான்கு ராஜவீதிகளில், ஆயிரக்கணக்-கான ஆண், பெண் பக்தர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதை தொடர்நது காமாட்சியம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். நாளை மாலை கும்பம் பாலித்தல், 14ம் தேதி காமாட்சியம்மன் மாவிளக்-குடன் திருவீதி பவனி வருகிறது. 15ம் தேதி காலை, 6:00 மணிக்கு பொங்கல் வைபவம் நடக்கிறது. மதியம், 3:00 மணிக்கு மேலப்பாளையம் மாதேஸ்வர நகரிலிருந்து அலகு தேர் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை அடைகிறது. 16ம் தேதி இரவு மஞ்சள் நீர், மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி