ரயில்வே தொழிற்சங்க தேர்தலுக்கு நான்கு இடங்களில் ஓட்டு பெட்டி
ஈரோடு: தமிழகத்தில் ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்தல் நாளை தொடங்கி, ௬ம் தேதி வரை நடக்கிறது. ஈரோட்டில் ரயில்வே தொழிலாளர்கள், 2,500 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஓட்டளிக்கும் உரிமை பெற்றவர்கள். இவர்கள் வசதிக்காக ஈரோட்டிலேயே ஓட்-டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி டீசல் லோகோ ஷெட், எலக்ட்ரிக்கல் லோகோ ஷெட், பழைய ரயில் திருமண மண்டபம், ரயில்வே இன்ஸ்டிடியூட் என நான்கு இடங்களில் ஓட்டு பெட்டி வைக்கப்படும். இதற்கான ஏற்-பாடுகளை ரயில்வே போலீசார், தொழிற்சங்க நிர்வாகிகள் மேற்-கொண்டுள்ளனர்.