தொகுதி முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டும் பா.ஜ.,
தாராபுரம்: திருப்பூர் மாவட்ட பா.ஜ., செயலாளர் சுகுமார் தலைமையிலான கட்சியினர், தாராபுரத்தில் நேற்று மதியம், அலங்கியம் சிக்னல் வழியே சென்ற வாகனங்களில், தாமரை ஸ்டிக்கர்களை வாகன ஓட்டிகளின் அனுமதி பெற்று ஒட்டினர். கடந்த சட்டசபை தேர்தலில் தாராபுரம் (தனி) தொகுதியில், அப்போதைய பா.ஜ., மாநில தலைவர் முருகன் போட்டியிட்டார்.இந்நிலையில் தொகுதி முழுவதும் தாமரை ஸ்டிக்கர்களை, வாகனங்களில் ஒட்டும் பணியில் பா.ஜ.,வினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் தாராபுரம் தொகுதியில் பா.ஜ., வரும் தேர்தலிலும் போட்டியிடுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.