உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலை மலை கோவிலுக்கு பஸ் சேவை நாளை முதல் நிறுத்தம்

சென்னிமலை மலை கோவிலுக்கு பஸ் சேவை நாளை முதல் நிறுத்தம்

சென்னிமலை: சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவி-லுக்கு செல்லும் மலைப்பாதை சாலை, 7.53 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தும் பணி நடக்கிறது. இதனால் செப்., 18ம் தேதி- முதல், மலைப்பாதை வழியாக இரண்டு, நான்கு சக்கர வாக-னங்கள் செல்ல தடை செய்யப்பட்டது. படிக்கட்டு வழியாக மட்டுமே செல்ல பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அதேசமயம் கோவிலுக்கு சொந்தமான பஸ் மட்டும் இயக்கப்பட்டது. இந்நி-லையில் நாளை முதல் பஸ்சும் இயக்கப்படாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி