உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துாய்மை பணியாளர் 469 பேருக்கு முகாம்

துாய்மை பணியாளர் 469 பேருக்கு முகாம்

கோபி:கோபி அருகே லக்கம்பட்டி, காசிபாளையம், வாணிப்புத்துார், பெரிய கொடிவேரி என, 11 டவுன் பஞ்சாயத்துக்களில், 469 துாய்மை பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு துாய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தில், அரசு பொது சேவை முகாம் நடந்தது. வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். வருமான சான்றிதழ் என பல்வேறு சான்றிதழ் கிடைக்க முகாமில் வழிவகை செய்யப்பட்டது. கோபி ஆர்.டி.ஓ., சிந்துஜா, டவுன் பஞ்., நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ