திருவிளக்கு பூஜை
அந்தியூர்:அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில், விஷ்ணு துர்கை வழிபாட்டுக்குழு சார்பில், 108 திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. விவசாயம் செழிக்க, தொழில் சிறக்க, மழை பொழிய வேண்டி நடந்தது. அந்தியூர், தவிட்டுப்பாளையம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் விஷ்ணு துர்கை வழிபாட்டுக் குழுவை சேர்ந்த தேவி, கீர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.