கட்டுமான தொழிலாளர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
ஈரோடு: ஈரோடு நலவாரிய அலுவலகம் முன், ஈரோடு மாவட்ட கட்டு-மான தொழிலாளர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில் மாவட்ட தலைவர் முருகையா தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.தொழிலாளர்களுக்கு எதிரான, நான்கு சட்ட தொகுப்புகளை மத்-திய அரசு கைவிட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு, 55 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும். பென்ஷனை, 3,000 ரூபா-யாக உயர்த்தி வழங்க வேண்டும்.இயற்கை மரணம், விபத்து, திருமணம், கல்வி போன்ற உதவித்-தொகைகளை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். வாரி-யத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளிகளுக்கு பொங்கல் தொகுப்புடன், 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்-தினர். நிர்வாகிகள் மாரப்பன், சுப்பிரமணியம், பொன்பாரதி, மணி, ஆனந்தன், சத்தியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.