கார் மோதி முதியவர் பலி
பெருந்துறை: பெருந்துறை, காடபாளையம், புற்றுக்கண் கோவில் அருகில், நேற்று அதிகாலை சாலையை கடக்க முயன்றவர் மீது கார் மோதி-யது. இதில் பலத்த காயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லாரி மருத்துவமனையில் சேர்ந்-தனர். அங்கு சிறிது நேரத்தில் உயிரிழந்தார். விபத்தில் இறந்தவ-ருக்கு, 60 வயது இருக்கும். யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரிக்கின்றனர்.