லாரி சக்கரத்தில் விழுந்த எலக்ட்ரீஷியன் பலி
காங்கேயம்: காங்கேயம், திருப்பூர் சாலை, பாரதியார் வீதியை சேர்ந்த எலக்ட்ரீஷியன் காதர் பாட்சா, 28; ஹோண்டா பைக்கில் காங்கேயம்-திருப்பூர் சாலையில் நேற்று காலை, 11:00 மணியளவில் சென்றார்.அதே திசையில் சிமெண்ட் மூட்டை ஏற்றிய லாரி சென்றது. இடது புறமாக லாரியை முந்த முயன்றபோது எதிர்பாராதவிதமாக முன்பக்க சக்கரத்தில் மோதி விழுந்தார். பின்சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி பலியானார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.