உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.௨௯ லட்சம் மோசடியில் அரசு பஸ் டிரைவர் கைது

ரூ.௨௯ லட்சம் மோசடியில் அரசு பஸ் டிரைவர் கைது

அந்தியூர்: அந்தியூர், தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் விஜய். பி.இ., சிவில் பட்டதாரி. இவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக, அரசு பஸ் டிரைவர் சாமியப்பன், மகேந்திர ராஜா என்-பவரை அறிமுகம் செய்துள்ளார். இவரிடம் சாமிக்கண்ணு, ௨௯ லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், உறுதியளித்தபடி வேலை வாங்கித் தரவில்லை. இதனால் அந்தியூர் போலீசில் புகா-ரளித்தார். விசாரித்த போலீசார், சாமியப்பனை கைது செய்தனர். தலைமறைவான மகேந்திர ராஜாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி