நாளை குறைதீர் கூட்டம்
கோபி, கோபி மின் பகிர்மான வட்டம் சார்பில், நாளை காலை, 11:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, கோபி செயற்பொறியாளர் அலுவலகத்தில், மாதாந்திர குறைதீர் கூட்டம் நடக்கிறது. கோபி கோட்ட மின் நுகர்வோர் குறைகளை தெரிவித்து தீர்வு காண, கோபி கோட்ட மேற்பார்வை பொறியாளர் சின்னுசாமி அழைப்பு விடுத்துள்ளார்.* ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை காலை, 11:00 மணிக்கு மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம், 'செயற்பொறியாளர், 948 - ஈ.வி.என்., சாலை, ஈரோடு-9' என்ற முகவரியில் நடக்கிறது. இதில் ஈரோடு மாநகர், கருங்கல்பாளையம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சம்பத் நகர், திண்டல், அக்ரஹாரம், மேட்டுக்கடை, சித்தோடு, கவுந்தப்பாடி பயனீட்டாளர்கள் குறை, கோரிக்கைகளை தெரிவித்து பயன் பெறலாம்.