உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபி அந்தியூரில் மழையால் மகிழ்ச்சி

கோபி அந்தியூரில் மழையால் மகிழ்ச்சி

கோபி, கோபியில் நேற்று காலை முதல் அக்னி வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் கோபி பஸ் ஸ்டாண்ட், புதுப்பாளையம், பாரியூர் சாலை, மேட்டுவலவு, நாயக்கன்காடு, கரட்டூர் உள்ளிட்ட பகுதியில் மதியம், 3:30 மணிக்கு சாரல் மழை பெய்தது. 15 நிமிடம் மட்டுமே நீடித்தது. அதன்பின் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.* அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான தவிட்டுப்பாளையம், புது மேட்டூர், சின்னத்தம்பிபாளையம், புதுப்பாளையம், கண்டியானுார் மேட்டூர், சமத்துவபுரம், சங்கராப்பாளையம் உட்பட பல்வேறு இடங்களில், மதியம், 2:30 மணிக்கு மிதமாக தொடங்கிய மழை, அதே வேகத்தில் அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது.கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ