மேலும் செய்திகள்
மின்வாரிய ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
14-May-2025
ஈரோடு, ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள அரசு போக்குவரத்து மண்டல அலுவலகம் முன், அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில், மண்டல செயலர் ஜீவா ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநில இணை செயலர் அன்பு கோரிக்கை குறித்து பேசினார்.அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவங்கி பேசி முடிக்க வேண்டும். ஓய்வு தொழிலாளர்களுக்கு அன்றைய தேதியிலேயே ஓய்வூதிய பலன்களை முழுமையாக வழங்க வேண்டும். பொன் விழா ஆண்டு பரிசு எனக்கூறி, சிறிய பரிசாக வழங்கி ஏமாற்றுவதை விடுத்து, மின் துறைக்கு வழங்கியது போல, 3 சதவீத சிறப்பு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
14-May-2025