பழங்குடியின மக்களுக்கான மளிகை கடை திறப்பு விழா
பழங்குடியின மக்களுக்கானமளிகை கடை திறப்பு விழாஈரோடு, நவ. ௬-ரீடு சேவை நிறுவனம், தாளவாடி தாலுகா ஆசனுார் மலையில் ஒன்பது பழங்குடி கிராமங்களில் கல்வி, பொருளாதாரம் மற்றும் சுகாதார பணிகளை செய்து வருகிறது.உணவு பொருட்கள் வாங்க இட்டரை கிராம மக்கள், சத்தியமங்கலம், 30 கி.மீ., அல்லது தாளவாடி, 20 கி.மீ., செல்ல வேண்டும். இதை தீர்க்கும் விதமாக இட்டரை கிராமத்தில், மளிகை கடை திறப்பு விழா, ரீடு நிறுவன இயக்குனர் கருப்புசாமி தலைமையில் நடந்தது. ஆசனுார் வனகோட்ட துணை இயக்குனர் சுதாகர், கடையை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் தலமலை வனச்சரகர் சுகுந்தன், கிராம வளர்ச்சி குழு தலைவர்கள் முன்னிலை வகித்தனர். ரீடு நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வரவேற்றார். திட்ட அலுவலர் சரவணக்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரீடு திட்ட அலுவலர்கள் சிவராஜ், ரம்யா, கிருத்திகேஸ்வரி செய்தனர்.