கொங்கு நாடு திராவிடகட்சி சமூக நீதி மாநாடு
பவானி:கொங்கு நாடு திராவிட கட்சியின் சமூக நீதி மாநாடு, பவானி அருகே ஆப்பக்கூடலில் நடந்தது. நிறுவன தலைவர் பாட்டன் சக்திவேல் தலைமை வகித்தார். அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு ௬ சதவீதமாக வழங்க வேண்டும். பஞ்சமி நிலங்களை தலித் மக்களுக்கு மீட்டு தர வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.அனைத்து மாவட்டங்களிலும் அரசால் தொழில்நுட்ப ஆலைகள் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.