மேலும் செய்திகள்
மொடச்சூர் சந்தையில் பருப்பு வியாபாரம் 'டல்'
19-Oct-2025
* ஈரோடு மாவட்டம் கோபி அருகே மொடச்சூரில், பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனைக்கான வாரச்சந்தை நேற்று கூடியது. துவரம் பருப்பு (கிலோ), 110, குண்டு உளுந்து, 120, பச்சைபயிர், 135, பாசிப்பருப்பு, 130, தட்டைப்பயிர், 100, கொள்ளு, 80, கடுகு, 120, சீரகம், 320, மல்லி, 140, வெந்தயம், 90, பொட்டுக்கடலை, 100, கருப்பு சுண்டல், 80, வெள்ளை சுண்டல், 90, கடலைப்பருப்பு, 110, மிளகு, 800, வரமிளகாய், 180 ரூபாய் முதல், 200 ரூபாய் வரையும், பூண்டு, 80 ரூபாய் முதல், 200 ரூபாய் வரையும், புளி, 180 ரூபாய் முதல், 200 ரூபாய் வரையும் விற்பனையானது. * பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், ௪,௦௨௬ மூட்டைகளில், ௧.௭௮ லட்சம் கிலோ கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ, 208.15 ரூபாய் முதல் 222.42 ரூபாய்; இரண்டாம் தரம், 26.45 ரூபாய் முதல், 221.69 ரூபாய் வரை, ௩.௬௧ கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.* ஈரோட்டை அடுத்த சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று, 30 கிலோ எடை கொண்ட, 2,100 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை நாட்டு சர்க்கரை, 1,300 - 1,410 ரூபாய்க்கு விற்பனையானது. உருண்டை வெல்லம், 2,300 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,310 - 1,420 ரூபாய்; அச்சு வெல்லம், 150 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,400 - 1,450 ரூபாய்க்கு விற்றது. கடந்த வாரத்தை விட நாட்டு சர்க்கரை மூட்டைக்கு, 30 ரூபாய், உருண்டை வெல்லம் மூட்டைக்கு, 60 ரூபாயும் விலை குறைந்தது.* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 9,506 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ பச்சை தேங்காய், 5௭ ரூபாய் முதல் 6௬ ரூபாய்; கசங்கல் காய், 64.10 - 68.25 ரூபாய் வரை, 4,512 கிலோ தேங்காய், 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
19-Oct-2025