உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.1 லட்சம் மதிப்பிலான டூவீலரை திருடியவர் கைது

ரூ.1 லட்சம் மதிப்பிலான டூவீலரை திருடியவர் கைது

காங்கேயம், ஈரோடு மாவட்டம் பெரியசேமூரை சேர்ந்தவர் சண்முகம், 29; சில தினங்களுக்கு முன் வெள்ளகோவிலில் கட்டட இன்டீரியர் டெக்கரேஷன் வேலை செய்து கொண்டிருந்தார். தனக்கு சொந்தமான, 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கை அப்பகுதியில் நிறுத்தியிருந்த நிலையில் காணாமல் போனது. அவர் புகாரின்படி வெள்ளகோவில் போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் மாலை வாகன சோதனையில் பைக் சிக்கியது. கரூர், வங்கம்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து விஜய், 25, திருடி சென்றது தெரிய வந்தது. அவரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை