உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஐயப்பன் கோவிலுக்கு பால் குட ஊர்வலம்

ஐயப்பன் கோவிலுக்கு பால் குட ஊர்வலம்

சென்னிமலை: சென்னிமலை டவுனில் ஐயப்பா நகரில் உள்ள ஐயப்ப சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை பாலாபிஷேக விழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த வருடம், 15ம் ஆண்டு பாலாபிஷேக விழா நேற்று நடந்தது.இதையொட்டி திரளான பக்தர்கள் ஐயப்ப சாமி கோவிலில் இருந்து பால் குடங்களுடன் புறப்பட்டு, ராஜவீதிகளில் வலம் வந்தனர். பிறகு மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கிருந்து கோவிலுக்கு சென்றனர். இதை தொடர்ந்து ஐயப்ப சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஐயப்பா பக்த ஜனசபா நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை