உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலையோரம் முகாமிட்டுள்ள யானைகளால் மக்கள் பீதி

சாலையோரம் முகாமிட்டுள்ள யானைகளால் மக்கள் பீதி

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்-பட்ட வனச்சரகங்களில், ஏராளமான யானைகள் உள்ளன. சமீப காலமாக, விளை நிலங்களில், யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால் விவசா-யிகள் கவலையில் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை தாள-வாடி செல்லும் வழியில் குருபரருண்டி பகுதியில் சாலையோரம், 10க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டிருந்தன. எப்போது வேண்டுமானாலும் விளை நிலங்கள், ஊருக்குள் புகுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே, வனத்துறையினர் சாலையோரம் முகா-மிட்டுள்ள யானைகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை