உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓடும் பஸ்ஸில் மத பிரசாரம் ஆசாமியை சுற்றி வளைத்த மக்கள்

ஓடும் பஸ்ஸில் மத பிரசாரம் ஆசாமியை சுற்றி வளைத்த மக்கள்

தாராபுரம், டிச. 25-திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்த வெறுவேடம் பாளையத்தை சேர்ந்தவர் செந்தில், 48; பல்லடம் சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு, ௭:௦௦ மணியளவில் தனியார் பஸ்ஸில், மேட்டுக்கடை சென்றார். அப்போது பஸ்ஸில் இருந்தவர்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்த ஒருவர், செந்திலிடமும் தந்துள்ளார். அதில் கிறிஸ்தவ மத பிரசார வாசகங்கள் இருந்தது. பஸ்சில் எப்படி இதுபோல் தரலாம் என்று அவர் கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மொபைல்போனில் ஊர் மக்களுக்கு தகவல் அளித்தார். மேட்டுக்கடையில் செந்தில் இறங்கியபோது, பிரசார நோட்டீஸ் கொடுத்தவரும் இறங்கினார்.அங்கு காத்திருந்த மக்கள், மத பிரசார நோட்டீஸ் கொடுத்தவரை சுற்றி வளைத்து, குண்டடம் போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் மேட்டுக்கடையை சேர்ந்த ராமன், 52, என்பது தெரிந்தது. இதுகுறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vijay D Ratnam
டிச 25, 2024 15:40

புடிச்சி கொடுத்தால் என்ன தூக்கிலா போடப்போறாய்ங்க. வெளியே உட்டுடுவாய்ங்க, அதே ஆள் வேற பஸ்ஸில் ஏறி பிரச்சாரம் செய்வார். அதுக்கு பதிலா மூஞ்சி முகரையை பேத்து உட்டுடலாம். போலீஸ் ஸ்டேஷன் பாத்ரூமில் வழுக்கு விழுவது போல காலை உடைத்து விடலாம், போலீஸ் வந்து விசாரித்தால் மதம் மாற்ற முயற்சி செய்ததால் ரெண்டு தட்டு தட்டினோம். அண்ணனுக்கு பிஞ்சி மூக்கு குபுக்குன்னு ரத்தம் வந்திடுச்சின்னு சொல்லலாம். யார் செல்லமா தட்டினார் என்றால் ரெண்டாயிரம் பேர் வந்து நில்லுங்கள், இந்தமாதிரில்லாம் பண்ணப்படாது போங்கன்னு சொல்வாய்ங்க. அது போல கிறிஸ்தவர்களை, இஸ்லாமியர்களை மதம் மாற்ற ஹிந்துக்கள் முயன்றால் தட்டுங்கள். அதுபோல இஸ்லாத்துக்கு மாற கட்டாயப்படுத்தினால் மற்ற ரெண்டு பேரும் கவனிக்கலாம். இந்த தரித்திரம் பிடித்த மதம் மாற்றம் எனும் அயோக்கியத்தனம் ஒழிந்துவிடும்.