உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீபாவளிக்கு புத்தாடை எடுக்க கடைவீதிகளில் குவிந்த மக்கள்

தீபாவளிக்கு புத்தாடை எடுக்க கடைவீதிகளில் குவிந்த மக்கள்

ஈரோடு: தீபாவளியை முன்னிட்டு, ஈரோட்டில் கடைவீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும், 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் ஈரோடு மாநகரில் ஒரு வாரமாக, ஜவுளிக்கடை, நகை கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாநகரில் ஆர்.கே.வி. சாலை, நேதாஜி சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி, பன்னீர்செல்வம் பார்க், மேட்டூர் சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலைகளில் உள்ள ஜவுளி கடைகளிலும், ஜவுளி சந்தைகளிலும் புத்தாடைகளை வாங்க கூட்டம் அலைமோதியது. ஈரோடு மட்டுமின்றி மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து மக்கள் குடும்பத்தினருடன் வந்தனர்.மணிக்கூண்டு பகுதி சாலையோர வியாபாரிகள், மலிவான விலையில் ஜவுளிகளை விற்பனை செய்ததால் அங்கு அதிகளவில் மக்கள் கூடினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலினால் அசம்பாவிதங்களை தடுக்க ஆங்காங்கே போலீசார், மக்களோடு மக்களாக மப்டியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை