சிறுமிக்கு குழந்தை வாலிபர் மீது போக்சோ
ஈரோடு, தாளவாடிமலை கல்மந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், 35, கூலி தொழிலாளி. இவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்துகிறார். தற்போது சிறுமிக்கு பெண் குழந்தை உள்ளது. இதுபற்றி குழந்தைகள் நலக்குழுவினர், சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் விசாரித்த போலீசார், சுரேஷ் மீது போலீசார் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.