உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போதை பொருள் விற்பனையில் தொடர்பு? நைஜீரியா வாலிபரிடம் போலீசார் கிடுக்கி

போதை பொருள் விற்பனையில் தொடர்பு? நைஜீரியா வாலிபரிடம் போலீசார் கிடுக்கி

ஈரோடு: சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த வழக்கில், நைஜீரியா வாலிபர்கள் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் மொபைல் எண்ணை, சென்னை சைபர் கிரைம் போலீசார் சோதனை செய்தனர். இதில் பெருந்துறை ஈ.பி.நகரில் வசிக்கும் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஜான் சிபுக்கின், 25, என்பவருடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது. அவர்கள் அறிவுறுத்தலின்படி, பெருந்துறை போலீசார், நேற்று காலை அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:ஜான் சிபுக், 2022ல் ஓராண்டு விசா பெற்று இந்தியா வந்தார். திருப்பூர் காதர் பேட்டை பகுதி பஜாரில் பனியன் துணிகளை வாங்கி நைஜீரியாவுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளார். பெருந்துறையில் வீடு எடுத்து இரண்டாண்டாக தங்கியுள்ளார். வரும், 2025 பிப்., வரை விசா கால வரம்பை நீடித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். போதை பொருள் விற்பனையாளர்களுடனான தொடர்பு குறித்தும் விசாரித்தோம். இதில் சந்தேகத்துக்கு இடமாக எதுவும் இல்லாததால் அவரை விடுவித்து விட்டோம். இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை